ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரப் பொறுப்பாளர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியப் பொறுப்பாளர்கள், மம்சாபுரம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம் ஆகிய 5 பேரூராட்சிகளின் பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கு மனு தாக்கல் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நகரச் செயலாளர் உள்ளிட்ட 9 கட்சி பொறுப்புகளுக்கு மனு தாக்கல் நடைபெற்றது. தற்போது நகரச் செயலாளராக உள்ள வி.டி.முத்துராஜ், கட்சி மேலிடத்திலிருந்து மனு பெற பொறுபாளராக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவி தனலட்சுமி கிருஷ்ணமூர்த்தியிடம் மனு தாக்கல் செய்தார்.