இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நகர ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கான அமைப்புத் தேர்தல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்களுக்கான அமைப்புத் தேர்தல்களுக்கு மனு தாக்கல் செய்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சித் தொண்டர்கள்

News image
Updated On :15 மார்ச் 2015, 9:31 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்களுக்கான அமைப்புத் தேர்தல்களுக்கு மனு தாக்கல் செய்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சித் தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரப் பொறுப்பாளர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியப் பொறுப்பாளர்கள், மம்சாபுரம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம் ஆகிய 5 பேரூராட்சிகளின் பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கு மனு தாக்கல் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நகரச் செயலாளர் உள்ளிட்ட 9 கட்சி பொறுப்புகளுக்கு மனு தாக்கல் நடைபெற்றது. தற்போது நகரச் செயலாளராக உள்ள வி.டி.முத்துராஜ், கட்சி மேலிடத்திலிருந்து மனு பெற பொறுபாளராக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவி தனலட்சுமி கிருஷ்ணமூர்த்தியிடம் மனு தாக்கல் செய்தார்.

அப்போது கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், அதிமுக பிரமுகர் செல்லம்பிள்ளை, நகர்மன்ற துணைத் தலைவி சரோஜா நடராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் பதவிக்கு மனு வாங்கும் நிகழ்ச்சி மல்லியிலும், மம்சாபுரம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் பதவிக்கு மனு வாங்கும் நிகழச்சி மம்சாபுரத்திலும், வத்திராயிருப்பு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் பதவிக்கு மனு வாங்கும் நிகழ்ச்சி தனித் தனியே இரு இடங்களிலும் நடைபெற்றது. மேலும் எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி ஆகிய பேரூராட்சி பொறுப்பாளர்களை தேர்வு செய்தவற்கான மனு தாக்கல் அந்ததந்த இடங்களில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.