இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை எரித்து கொலை செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை எரித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :20 மார்ச் 2015, 10:39 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை எரித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி, நாடார் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பிள்ளையார் மகன் கணேசன் (48). இவரது மனைவி கஸ்தூரி (50). இவர்களுக்கு அகத்தீஸ்வரன் (21) என்ற மகன் உண்டு. கணேசன் ராஜபாளையத்தில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். கஸ்தூரி தனியார் நூற்பு ஆலையில் கூலி வேலை செய்து வந்தார்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள கணேசன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். வியாழக்கிழமை இரவு கணேசனுக்கு கஸ்தூரி சமைத்து வைக்கவில்லையாம். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கணேசன் மனைவியை தலையில் கம்பால் அடித்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்து உயிருக்குப் போராடி, புலம்பிக் கொண்டு இருந்துள்ளார். ஆத்திரம் தீராத கணேசன், மண்ணெண்ணையை கஸ்தூரி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அவர் உடல் முழுவதும் எரிந்து கருகி உயிரிழந்தார்.

வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.