நெல்லை: ஆற்றில் குளித்த மாணவன் சூழலில் சிக்கி சாவு
மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளித்த மாணவன் சூழலில் சிக்கி இறந்தான்.


மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளித்த மாணவன் சூழலில் சிக்கி இறந்தான்.
மேலப்பாளையம் வெள்ளை கலீபாசாகிபு தெருவை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன் நியாஸ் (14). அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை நியாஸ் தனது நண்பர்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளிக்க சென்றாராம். ஆற்றில் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த நியாஸ் சூழலில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மூச்சுத் திணறல் ஏற்பட்ட மயங்கிய நிலையில் நியாசை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நியாஸ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சென்று மாணவன் நியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...