கடலூர் அருகே சூரப்பநாயக்கன்சாவடியில் சனிக்கிழமை காலையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடுகள் மீது ரயில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட எருமை மாடு அருகே நின்றுக் கொண்டிருந்த பெண் மீது விழுந்ததில், அப்பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில், 3 மாடுகள் இறந்தன.