வரும் மார்ச் 10-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் எஸ்.மோகன்தாஸ் வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 4 மாதங்களுக்கான செலவினத்துக்கு ஒப்புதல் பெறும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. பேரவைத் தலைவர் வி.சபாபதி தலைமை தாங்குகிறார்.
ஏற்கெனவே தேர்தல் நடைபெறும் இதர மாநிலங்களான தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை கூட்டப்பட்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் புதுவையில் பேரவை எப்போது கூட்டப்படும் என தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது பேரவை கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடராக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடிக் காத்த குமரன் மண்ணில் தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுப்பு: உயா்நீதிமன்றம் வேதனை
நாட்டை முதன்மை பொருளாதார சக்தியாக மாற்ற அனைவரும் துணை நிற்க வேண்டும்: வானதி சீனிவாசன்

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
சாலை விபத்தில் சிக்கிய பெண்களிடம் இருந்து 4 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


