தடை உத்தரவை மீறி 9,760 வீட்டு மனைகள் பத்திரப்பதிவு
அங்கீகாரமில்லா வீட்டு மனைகள், கட்டடங்களை பத்திரப்பதிவு செய்ய கடந்தாண்டு செப்டம்பரில் 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.


அங்கீகாரமில்லா வீட்டு மனைகள், கட்டடங்களை பத்திரப்பதிவு செய்ய கடந்தாண்டு செப்டம்பரில் 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதன் பின்னர், ஏதாவது பத்திரப்பதிவு நடந்துள்ளதா என்பது குறித்து அரசு அறிக்கை அளிக்க வேண்டும். அவ்வாறு பத்திரப்பதிவுகள் நடைபெற்று இருந்தால் அது செல்லாது என, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி, கடந்தாண்டு செப்டம்பர் 9 முதல் நிகழாண்டு மார்ச் 28-ஆம் தேதி வரை, 9 ஆயிரத்து 760 அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை சார் பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என, பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.ஹன்ஸ்ராஜ் வர்மா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...