அதிமுக நூற்றாண்டுகாலம் நீடித்திருக்க வேண்டும்: திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத்திற்கேற்ப அதிமுக பல நூற்றாண்டுகாலம் நீடித்திருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் ஒவ்வொரு
அதிமுக நூற்றாண்டுகாலம் நீடித்திருக்க வேண்டும்: திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் பேட்டி

திருப்பூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத்திற்கேற்ப அதிமுக பல நூற்றாண்டுகாலம் நீடித்திருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனின் விருப்பம் என திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக மக்களில் அதிமுகவிலிருந்து ஒரு தொண்டன் கூட மாற்றுக்கட்சிக்கு சென்றதுகிடையாது. என அதிமுக ராணுவக்கட்டுக்கோப்போடு இயங்கக்கூடிய கட்சி. அனைவரும் இரட்டை இலையை காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருக்கிறோம். யாருக்கும் விருப்புவெறுப்பு இல்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எனக்குப் பிறகும் இந்த இயக்கம் ஆயிரம் ஆண்டுகள் வாழும் என்று கூறிய வார்த்தைக்கு மதிப்பளித்து ஒவ்வொரு தொண்டனும் உழைக்க வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகள் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com