கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கில் காவிரியிலிருந்து ஜூலை 11-ம் தேதி வரை நாள் தோறும்

News image
Updated On :21 மார்ச் 2017, 4:55 pm

உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கில் காவிரியிலிருந்து ஜூலை 11-ம் தேதி வரை நாள் தோறும் தமிழகத்திற்கு 2000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

காவிரி நீர் தொடர்பான விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும், “காவிரியில் இருந்து நீர் திறக்க அணைகளில் நீர் இல்லை. எங்கள் மாநிலத்திற்கே போதிய தண்ணீர் இல்லை” என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.