திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் பாஜக கொடியே பறக்கும்: அமித் ஷா

2019க்குப் பிறகு அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் பாஜக கொடியே பறக்கும் என பாஜ தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

News image
Updated On :14 அக்டோபர் 2018, 5:11 pm


போபால்: 2019க்குப் பிறகு அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் பாஜக கொடியே பறக்கும் என பாஜ தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஹோசங்காபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமித் ஷா பேசுகையில்,  பாஜகவில் மட்டுமே ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர், எந்த அரசியல் பிண்ணனியும் இல்லாமல் டீ விற்ற ஒருவரின் மகன், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரானது சாத்தியம்.  

மத்திய பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த 50 ஆண்டுகளுக்கு பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை பாஜக கொடியை பறக்க வைப்போம் என்றார்.  

பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சியினரை வைத்துக்கொண்டு காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் நடத்தி வருகிறது. ஆனால் பாஜக நாட்டின் பாதுகாப்பில் மட்டுமே அக்கறை செலுத்தி வருவதாக அமித்ஷா கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.