இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது: இம்ரான் கான் கண்டனம்

எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா

News image
Updated On :4 ஆகஸ்ட் 2019, 2:42 pm

DIN


எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கேரன் செக்டாரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன் தினம் முதல் தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 40 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் 5 முதல் 7 தீவிவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து பாகிஸ்தான் வாங்கிச் செல்லாம் என்று இந்தியா அறிவித்துள்ளது. 

Story image

இந்நிலையில், எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனித்தனியே பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இதை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

 ‘எல்லைத் தாண்டி அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1983-ஆம் ஆண்டின் சர்வதேச ஆயுதங்கள் ஒப்பந்தத்தையும், சர்வதேச மனிதாபின சட்டத்தையும் மீறி கொத்து குண்டுகளை பயன்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி பொது மக்கள் என்று தெரிவித்துள்ள அவர், காஷ்மீர் பிரச்னையில் சமரசம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், நீண்ட நாள்களாக காஷ்மீர் பகுதியில் நீடித்துவரும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் இது என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.