ஊழல் நிறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் எங்கே?: சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

ஊழல் நிறைந்த முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எங்கே தலைமறைவாகி உள்ளார்? அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்
ஊழல் நிறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் எங்கே?: சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

புதுதில்லி: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஊழல் நிறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் எங்கே தலைமறைகிவிட்டார்? என மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்க பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

மேலும், இந்த முறைகேட்டில் முக்கிய சதிகாரராக ப.சிதம்பரம் செயல்பட்டிருப்பது, வெளிப்படையாக தெரியவருகிறது; அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளுக்கு இதுவரை இருந்து வந்த தடை நீங்கியுள்ளது.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்றனர். அப்போது, அவர் வீட்டில் இல்லை. அவரை செல்லிடை பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதனை உறுதி செய்துகொண்ட அதிகாரிகள், மீண்டும் சிபிஐ அலுவலகத்துக்கு சென்று, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர், அவரது வீட்டுக்கு மீண்டும் வந்த அதிகாரிகள், சிபிஐ துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி முன்பாக 2 மணி நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்ற அறிவுறுத்தல் அடங்கிய நோட்டீஸை ஒட்டிவிட்டு சென்றனர். இதே நோட்டீஸ், ப.சிதம்பரத்தின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி  அவரது டிவிட்டர் பக்க பதிவில்,  " ஊழல் நிறைந்த முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எங்கே தலைமறைவாகி உள்ளார்? அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வலைவிரித்து தேடி வருகின்றன" என குறிப்பிட்டுள்ளார். இதனை சுமார் ஒன்றரை லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

மற்றொரு பதிவில், "ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை விசாரித்தது யார்? அமலாக்கத்துறையின் இணை இயக்குநர் டாக்டர்.ராஜேஷ்வர் சிங். பதவி உயர்வு மறுக்கப்பட்டு, லக்னோவிற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது தான் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு. கலியுகம்". என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com