மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நவி பகுதியில் உள்ள ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) சொந்தமான எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் இன்று செவ்வாய்கிழமை காலை திடீரென பயங்க தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். எரிவாயு ஹசிரா ஆலைக்கு திருப்பி விடப்பட்டது.
உயிரிழப்போ, சேதங்கள் குறித்தோ எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.