நாடு சூப்பர் எம்ர்ஜென்சி காலத்தில் இருந்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்க பதிவில், சர்வதேச ஜனநாயக நாளான இன்று, நாட்டின் அரசியல் சட்டகத்தின் மாண்புகளை பாதுகாப்பதற்கு மீண்டும் ஒரு முறை நாம் உறுதி எடுத்துக்கொள்வோம்.
நமது நாடு இப்போதுள்ள சூப்பர் எமர்ஜென்சி காலத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ள மம்தா, இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று கூறியுள்ளார்.