இந்தியாவில் கரோனா பாதிப்பு 17.50 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்  54,736  பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17 லட்சத்து 50 ஆயிரத்து 724 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 17.50 லட்சத்தை தாண்டியது
Published on
Updated on
1 min read

புது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்  54,736  பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17 லட்சத்து 50 ஆயிரத்து 724 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 37,364-ஆக அதிகரித்தது. 

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 54,736 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 853 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 37,364-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நோய்த்தொற்றுக்காக 5,67,730 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,45,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4,31,719  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு 15,316 பேர் பலியாகியுள்ளனர்,  1,49,214 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 1- ஆம் தேதி வரை 1,98,21,831 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 4,63,172 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பாதிப்பு:  17,50,724
பலி: 37,364
குணமடைந்தோர்: 11,45,630
சிகிச்சை பெற்று வருவோா்: 5,67,730

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com