கரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக் கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கேள்வி எழுப்பி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, உண்மை. நமது உள்துறை அமைச்சர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை. ஆனால், அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றார் என ஆச்சரியப்படுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பொது நிறுவனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றால் சக்திவாய்ந்த பிரபலங்களின் ஆதரவு தேவை என்றும் சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளார்.