அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி. : ராமர் கோவிலுக்கு எதிராக தகவல் பரப்பியவர்கள் கைது

உத்தர பிரதேசத்தில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதற்காக மருத்துவர் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர். 

News image
ராமர் கோவில் மாதிரி படம்
Updated On :7 ஆகஸ்ட் 2020, 6:41 am

PTI

உத்தர பிரதேசத்தில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகவும், ராமர் கோவிலுக்கு எதிராகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதற்காக மருத்துவர் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குன்வர் ஞானஞ்சய் கூறுகையில்,

உத்தர பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அன்றைய தினம் சிலர் சமூக ஊடகங்களில் ராமர் கோவிலுக்கு எதிராகவும், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எதிராகவும் மருத்துவர் அலீமின் மருத்துவமனையில் அமர்ந்து தகவல்கள் பரப்புவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறையினர் அங்கு சென்றபோது, டாக்டர் அலீம், கம்ருதீன் மற்றும் சாஹிபே ஆலம் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவரில் சாஹிபே ஆலம் என்பவர் பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் அலுவலக பொறுப்பாளராகவும், சமூக ஜனநாயக கட்சியின் ஊடக பொறுப்பாளராகவும் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.

டாக்டர் அலீம் மற்றும் கம்ருதீன் ஆகிய இருவரும் சமூக ஜனநாயக கட்சியின் வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். மேலும், சமூக ஜனநாயக கட்சி மற்றும் பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா உடனான தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.