அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அடல் பிஹாரி வாஜ்பாய் பல்கலைக்கழக நிர்வாகப் பணிகள் விரைவில் தொடக்கம்

லக்னோவில் உத்தரப்பிரதேச அரசு அமைக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கப்படும் என்று துணைவேந்தர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :14 ஆகஸ்ட் 2020, 10:48 am

PTI

லக்னோவில் உத்தரப்பிரதேச அரசு அமைக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கப்படும் என்று துணைவேந்தர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தரும் புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஏ.கே.சிங் கூறுகையில்,

லக்னோ நகரத்தின் சுல்தான்பூர் சாலையில் 50 ஏக்கர் நிலத்தை மாநில அரசு பல்கலைக்கழகம் கட்ட வழங்கியுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

இருப்பினும், அதன் நிர்வாகப் பணிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் கோமதி நகரில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ நிறுவன கட்டிடத்திலிருந்து தொடங்கும். 

இந்த புதிய மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதன் மூலம் சுமார் 60 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், 300 நர்சிங் கல்லூரிகள் மற்றும் துணை மருத்துவ நிறுவனங்கள் இதன் கீழ் வரும் என்று சிங் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் சின்னம் மற்றும் கோஷத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். இதற்கான இணையவழி போட்டிகள் நடந்து வருகின்றது. மேலும், போட்டியில் சிறந்த சின்னம் மற்றும் கோஷத்தை அனுப்பும் போட்டியாளருக்கு பரிசு வழங்கப்படும்.

இந்த பல்கலைக்கழகம் ரூ. 200 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, நிர்வாகக் கட்டடம், கலையரங்கம், அருங்காட்சியகம், விருந்தினர் மாளிகை மற்றும் வீட்டுவசதிப் பகுதிகள் கட்டப்படும் என்று அவர் கூறினார். .

கடந்த 2019 டிசம்பர் 25-ம் தேதி அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.