அரசியல் பரபரப்பு: முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் 2-ம் கட்ட ஆலோசனை
தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துடன் இரண்டாம் கட்ட ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் மீண்டும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை: தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துடன் இரண்டாம் கட்ட ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் மீண்டும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கடந்த சில நாள்களாக அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என அக்கட்சியில் அமைச்சர்கள் முதல் கட்சி தொண்டர்கள் வரை பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, செங்கோட்டையன், சி.வி சண்முகம் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பின்னர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இல்லத்திற்கு சென்ற மூத்த அமைச்சர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு, முதல்வர் பழனிசாமியை சந்தித்து சுமார் அரை மணி நேரம் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு சில அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சென்று ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், துணை முதல்வருடன் ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...