சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்தோனேசியாவில் தொடரும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

News image
இந்தோனேசியாவில் தொடரும் நிலநடுக்கம்
Updated On :21 ஆகஸ்ட் 2020, 6:58 am

DIN

இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில்,

கிழக்கு இந்தோனேசியாவில் 6.9 அலகுகள் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டது.

பண்டா கடலில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து தெற்கே உள்ள குபாங் நகரின் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். அப்பகுதியில் கட்டிடங்களும் தெருவிளக்குகளும் அதிர்ந்ததில் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். 

சுலவேசி தீவில் கட்டாபுவிலிருந்து தெற்கே 220 கிலோமீட்டர் தொலைவில், 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில், கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் புவியியல் மையத்தால் வெளியிடப்படவில்லை மற்றும் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.

கடந்த புதன்கிழமை, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த 6.8 அலகு மற்றும் 6.9 அலகு ஆகிய இரண்டு நிலநடுக்கங்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.