மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு: ஊத்தங்கரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஊத்தங்கரையில் உச்ச நீதிமன்றத்தின் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்று  அருந்ததியர்  இன பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

News image
அருந்ததியர்  இன பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Updated On :28 ஆகஸ்ட் 2020, 12:54 pm

DIN

ஊத்தங்கரையில் உச்ச நீதிமன்றத்தின் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்று  அருந்ததியர்  இன பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி ஊத்தங்கரை பகுதியிலுள்ள அருந்ததியர் இன பொதுமக்கள் சார்பாக உச்ச நீதிமன்றம் மாநில அரசுகள் தாழ்த்தப்பட்டோருக்காக 18 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துவது செல்லும் என தீர்ப்பு வழங்கியதை பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர், இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும் தமிழ்நாட்டில் அருந்ததியர் இன மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசியல் கட்சி பொதுமக்களுடன், மதுரைவீரன் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் கந்தசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜே.எஸ்.ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மிட்டப்பள்ளி சின்னதாய் கமலநாதன், கீழ்குப்பம் ஜெயமணி திருப்பதி, பொறியாளர் அணி காந்தி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் சின்னத்தம்பி, சீனிவாசன், முருகன், குருமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

மேலும், நிகழ்ச்சியில் வெப்பாலம்பட்டி, வெண்ணாம்பட்டி, கொட்டாரபட்டி, பனைமரத்துப்பட்டி, ஊனாம்பாளையம், கவுண்டனூர், கஞ்சனூர், அண்ணா நகர், சந்த கொட்டாவூர், வசந்தபுரம், காந்திநகர், கவர்னர் தோப்பு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக காமராஜர் அறக்கட்டளை செயலாளர் சின்ன முத்து நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.