தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ஜி.நாராயண் ரெட்டி கட்சியிலிருந்து விலகினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் ஜி.நாராயண் ரெட்டி(வயது 56). இவர் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.