இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

உ.பி.யில் சமாஜவாதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்கள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட சட்ட மேலவை உறுப்பினர்கள்
Updated On :8 டிசம்பர் 2020, 4:02 pm

ANI

உத்தரபிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே விவசாயக் குழு விடுத்த அழைப்பை ஏற்று இன்று நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச சட்டப்பேரவை முன்பு சமாஜவாதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.