மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி அமைச்சர்கள் உண்ணாவிரதம்

தில்லியில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு  வரும்   நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

News image
போராட்டத்தில் பேசும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
Updated On :14 டிசம்பர் 2020, 10:14 am

ANI

தில்லியில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு  வரும்   நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு பல்வேறு விவசாய அமைப்புகள் இன்று 19 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய, சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திக்ரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. 

இதையடுத்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் அதிஷி மார்லேனா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.