மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கரில் கடந்த 3 ஆண்டுகளில் 216 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் கடந்த 3 ஆண்டுகளில் 216 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 966 பேர் சரணடைந்துள்ளதாகவும் மாநில அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 டிசம்பர் 2020, 11:01 am

PTI

சத்தீஸ்கரில் கடந்த 3 ஆண்டுகளில் 216 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 966 பேர் சரணடைந்துள்ளதாகவும் மாநில அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் தனேந்திர சாஹு நக்சல்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாநில உள்துறை அமைச்சர் தம்ரத்வாஜ் சாஹு  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,

2018ஆம் ஆண்டு முதல் நிகழ்வாண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை 216 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 966 பேர் சரணடைந்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக சுக்மா மாவட்டத்தில் 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், 333 பேர் சரணடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பிஜாப்பூர் (46), டான்டேவாடா (30), ராஜ்நந்த்கான் (17), நாராயன்பூர் (16), பஸ்தர் (7), தம்தாரி (7) ), கங்கர் (6), கபிர்தாம் (3) மற்றும் கரியாபந்த் மற்றும் கோண்ட்கான் மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

மேலும், டான்டேவாடாவில் (300), நாராயண்பூரில் (164), பிஜாப்பூரில் (77), கோண்டகானில் (46), பஸ்தாரில் (36), ராஜ்நந்த்கானில் (7) மற்றும் காங்கரில் (3) பேர் சரணடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.