இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பஞ்சாபில் பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தம்

பஞ்சாபில் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image

பஞ்சாப்பில் பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தம்

Updated On :29 ஜூலை 2020, 8:18 am

ANI

பஞ்சாபில் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.73.23 க்கும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.77 க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியர்  ராஜ்குமார் கூறுகையில், “பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இங்கு விற்பதை விட ரூ. 5 குறைவாக பக்கத்து மாநிலங்களான ஹிமாச்சல், ஹரியானா மற்றும் சட்டீஸ்கரில் விற்கப்படுகிறது. ஆனால் பஞ்சாப்பில் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டேவுள்ளது” என தெரிவித்தார்.

இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.19 க்கு விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.