மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேட்டுப்பாளையம் அருகே கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் கோயில் முன்பு கோவில்களை திறக்கக் கோரி ஒற்றைக் காலில் நின்று  இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்.

News image
Updated On :10 ஜூன் 2020, 5:26 am

DIN


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் கோயில் முன்பு கோவில்களை திறக்கக் கோரி ஒற்றைக் காலில் நின்று  இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்.

கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் பொது முடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டது. அன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்கள், இந்து கோவில்கள் மூடப்பட்டு ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதியளிக்கப்பட்டன. அன்று முதல் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதோடு கோவில்களில் பக்தர்களும் அனுமதிக்கப்பட வில்லை. தற்போது மத்திய அரசு வழிபாட்டுத்தலங்களை கடந்த ஜூன் 8 திங்கள் கிழமை முதல் திறக்க அனுமதியளித்தது. ஆனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு கோயில்களை திறக்கச் சொல்லி இந்து முன்னணியினர் புதன்கிழமை நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட  செயலாளர் சிவப்புழ் தலைமையில் நடைபெற்றது.

இதேபோல் மேட்டுப்பாளையம் பத்திகாளியம்மன் கோவில், சிறுமுகை ஆஞ்சநேயர் கோயில், காரமடை குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.