தவறான மருந்தை சாப்பிட்ட பிளஸ் 1 மாணவர் பலி
மதுரை மாவட்டம் தேனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சுமணி.இவரது மகன் (16) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.


மதுரை மாவட்டம் தேனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சுமணி.இவரது மகன் (16) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அண்மையில் பள்ளி மாணவனுக்கு ஏற்பட் உடல்நலக்குறைவுக்கு, மருத்துவர்கள் சத்து டானிக் சாப்பிட அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி மாணவர் டானிக்கை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணவர் தவறுதலாக வேறு டானிக்கை சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த மாணவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதித்தனர்.
அங்கு மாணவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் கடந்த 2 நாள்களாக சிகிச்சையில் இருந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...