வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே கரோனா தொற்று உறுதியானதையடுத்து டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கொருக்கை பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அந்த பகுதியை சார்ந்து நாகை மாவட்ட எல்லைக்குள்பட்ட துளசாபுரம், சாக்கை சாலக்கடை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை திறக்க கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொருக்கை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேதரத்தினம் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர், கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடம், காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.