இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரோஹித் அதிரடி அரைசதம் : பஞ்சாபிற்கு 192 ரன்கள் இலக்கு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்தனர்.

News image
அரைசதம் அடித்த மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா
Updated On :1 அக்டோபர் 2020, 3:53 pm

DIN

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற  முதலில்  பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளார்.

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் டி காக் அவுட்டானார்.

பின் களமிறங்கிய கிஷான் 28 ரன்னிலும், சூர்யகுமார் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள்.

அரைசதம் கடந்து அதிரடியாக ஆடிய மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 45 பந்தில் 70 ரன்கள் எடுத்திருந்தபோது நிஷாம் பிடித்த அட்டகாசமான கேட்சில் அவுட்டானார்.

பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் போலார்ட் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தனர்.

இறுதிவரை களத்தில் இருந்த பாண்டியா 30 (11) ரன்களும், போலார்ட் 47 (20) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம் பஞ்சாப் அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.