தற்போதைய செய்திகள்
விஜயதசமியில் குழந்தைகளை சேர்க்க அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு
விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு அருகாமையில் வசிக்கும் பள்ளிக்கு செல்லாத 5 வயதுக்குள்பட்ட குழந்தைளைக் கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், பள்ளிகளில் சேர்க்கும் அன்றே பாடப் புத்தகங்களை வழங்கவேண்டும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.