ஆந்திரத்தில் நவ.2 முதல் பள்ளிகள் திறப்பு

ஆந்திரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு
ஆந்திரத்தில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு

ஆந்திரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும். பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 2 ஆம் தேதியும், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 23 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மற்றும் பள்ளி வேலையானது அரை நாள் மட்டுமே செயல்படும் என தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com