மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொறியியல் கலந்தாய்வுக்கு தடைக் கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

News image
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
Updated On :4 செப்டம்பர் 2020, 9:30 am

DIN

தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த அசோகன் தாக்கல் செய்த மனு, கரோனா தொற்று பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வுகளின் முடிவுகள் வருவதற்கு முன்பே, தமிழக உயர்கல்வித்துறை செப்டம்பர் 17 ஆம் தேதி பொறியியல் சேர்க்கையான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களால், தமிழக பொறியில் சேர்க்கை கலந்தாய்வில் இடம்பிடித்த மாணவர்களின் இடங்கள் காலியிடங்களாகும். அந்த இடங்கள் நிரப்படுவது குறித்து அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே அந்தக் காலியிட்ங்களை நிரப்புவது குறித்து உரிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் வரை பொறியியல் கல்லூரிக்களுக்கான சேர்க்கைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள் விரும்பும் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, காலியிடங்கள் ஏற்படுவது இயல்பானது. இது தொடர்பாக அரசு எப்படி கையாள்கிறது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுதார் கேட்டு அறிந்து கொள்ளலாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.