சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகாராஷ்டிரத்தில் 24 மணிநேரத்திற்குள் 3 நிலநடுக்கம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை காலை 2.7  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் 24 மணிநேரத்திற்குள் 3 நிலநடுக்கம் (கோப்புப்படம்)
Updated On :5 செப்டம்பர் 2020, 6:10 am

ANI

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை காலை 2.7  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் மும்பை நகரத்தின் 98 கி.மீ வடக்கே சனிக்கிழமை காலை 6.36 மணியளவில்  2.8 ரிக்டர் அளவு நில அதிர்வு உணரப்பட்டது.

பூமிக்கடியில் சுமார் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறினர்.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவை தாக்கிய மூன்றாவது நில அதிர்வு இதுவாகும்.

இதற்கு முன்  வெள்ளிக்கிழமை காலை 10:33 மணியளவில் மும்பை நகரத்தின் 91 கி.மீ வடக்கே  2.8 ரிக்டர் அளவு நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் நேற்று இரவு 11:41 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நில அதிர்வு மகாராஷ்டிராவின் நாசிக்கிற்கு மேற்கே 98 கிலோ மீட்டரில் உணரப்பட்டது.

இந்த நில அதிர்வால் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.