தமிழகத்தில் மேலும் 1,559 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 26 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வியாழக்கிழமை (ஆக. 26) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதையும் படிக்க | உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி: கமல்ஹாசன் உறுதி
புதிதாக 1,559 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,07,206-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 26 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,814-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,816 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,54,323-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் மேலும் 1213 பேருக்கு கரோனா தொற்று
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 18,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.