ரஷியாவில் 10 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
ரஷியாவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை 10 லட்சம் பேருக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.


ரஷியாவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை 10 லட்சம் பேருக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி கண்டறிந்து வருகின்றன. இந்நிலையில் ரஷியா 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கரோனா பாதிப்பிற்கு தடுப்பூசி கண்டறிந்து விட்டதாக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து, ரஷிய மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இதுவரை 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
இந்தத் தடுப்பூசியின் சோதனைகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...