மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எம்பிக்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: மக்களவைத் தலைவர்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

News image
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
Updated On :19 ஜனவரி 2021, 12:33 pm

ANI

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடா் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது மாா்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா்.

இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியதாவது,

கரோனா பரவலுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29ஆம் தேதி முதல் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில், மாநிலங்களவை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை, மக்களவை மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெறும். கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம்பெறும்.

மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உணவகத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.