நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் வழங்குகிறது இந்தியா
நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாளை(ஜன.21) வரவுள்ளதாக நேபாள சுகாதாரத்துறை அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி புதன்கிழமை தெரிவித்தார்.


நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாளை(ஜன.21) வரவுள்ளதாக நேபாள சுகாதாரத்துறை அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி புதன்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவின் நட்பு நாடுகளான பூட்டான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20 முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் முந்தைய அறிக்கையில் தெரிவித்தது.
இதையடுத்து பூட்டான் மற்றும் மாலத்தீவுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாளத்திற்கு நாளை 10 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படவுள்ளது.
இதுகுறித்து நேபாள சுகாதாரத்துறை அமைச்சர் திரிபாதி கூறியதாவது,
நேபாளத்திற்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசியை இந்தியா வழங்க உள்ளது. தடுப்பூசிகள் நாளை காத்மாண்டுவிற்கு வரவுள்ளது.
நாட்டில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...