மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் போராடும் விவசாயிகள் பாகிஸ்தானியர்களா? சரத் பவார்

தில்லியில் போராடி வரும் விவசாயிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களா என்று சரத் பாவர் மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் (கோப்புப்படம்)
Updated On :25 ஜனவரி 2021, 10:46 am

ANI

தில்லியில் போராடி வரும் விவசாயிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களா என்று சரத் பாவர் மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல் உள்ளிட்டோா் 11 கட்ட பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டனா்.

புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை. அச்சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை. அவா்களது கோரிக்கையை மத்திய அரசும் ஏற்கவில்லை.

இத்தகைய சூழலில், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கூடுதல் நெருக்கடி அளிக்க விவசாயிகள் முடிவெடுத்தனா். நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள ஜனவரி 26-ஆம் தேதியில் தில்லியில் பிரமாண்டமான டிராக்டா் பேரணியை முன்னெடுக்கப் போவதாக அவா்கள் அறிவித்தனா்.

இந்நிலையில், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் ஆளுநர் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி திங்கள்கிழமை சென்றனர். 

அந்த பேரணியின் போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் விவசாயிகளிடம் பேசியதாவது,

தில்லியில் கடும் குளிரிலும் பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேச விவசாயிகள் கடந்த 60 நாள்களாக போராடி வருகின்றனர். பிரதமர் அவர்களைப் பற்றி விசாரித்தாரா? இந்த விவசாயிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆளுநரை சந்திக்க ராஜ்பவனுக்கு சென்ற விவசாயிகளை அவர் பார்க்கவில்லை. இதுபோன்ற ஆளுநரை மகாராஷ்டிரம் இதற்கு முன் பார்த்ததில்லை. நடிகை கங்கனாவை சந்திக்க அளுநருக்கு நேரம் இருக்கிறது, ஆனால் விவசாயிகள் நேரம் இல்லையா?. விவசாயிகளை சந்திப்பது ஆளுநரின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.