மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'காவல்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’: ஹரியாணா முதல்வர்

ஹரியாணாவில் சட்டம், ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று முதல்வர் மனோகர் லால் கட்டரி தெரிவித்துள்ளார்.

News image
​ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர்
Updated On :26 ஜனவரி 2021, 3:45 pm

ANI

ஹரியாணாவில் சட்டம், ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி தில்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். 

மேலும், தில்லியில் பல்வேறு இடங்களில் காவல்துறையில் தடுப்புகளை உடைத்தெறிந்து உள்ளே நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்தனர். இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர், ஒரு விவசாயி பலியானார்.

இந்நிலையில் தில்லி எல்லையான ஹரியாணா பகுதிகளில் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை செய்வதற்காக ஹரியாணா முதல்வர் தலைமையில் இன்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய முதல்வர் கூறியதாவது,

அனைத்து காவல் ஆணையர், துணை ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.