தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை

தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து  நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை
மத்திய தொழில் பாதுகாப்பு படை
Updated on
1 min read

தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து  நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தில்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 கார்கள் சேதமடைந்தது. 

இதனைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அனைத்து விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், தேவையான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com