ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா நிதி: நாகையில் மணக்கோலத்தில் வந்து ரூ. 50,000 அளித்த புதுமணத் தம்பதி

நாகையில் திருமணம் முடிந்தவுடன், மணக்கோலத்திலேயே மாவட்ட ஆட்சியரகம் வந்த ஒரு புதுமணத் தம்பதி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரத்தை நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது.

News image
Updated On :17 மே 2021, 2:20 pm

DIN

நாகப்பட்டினம்: நாகையில் திருமணம் முடிந்தவுடன், மணக்கோலத்திலேயே மாவட்ட ஆட்சியரகம் வந்த ஒரு புதுமணத் தம்பதி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரத்தை நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது.

நாகை, புத்துார் பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் ஷெரின்ராஜ். இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விக்டர்ராஜ் மகள் சூர்யாவுக்கும் நாகை புனித லூர்து மாதா தேவாலயத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.

பின்னர்,  மணமக்கள் ஷெரின்ராஜ்- சூர்யா ஆகியோர் தங்கள் மணக்கோலத்துடன் நாகை மாவட்ட ஆட்சியரகம் வந்து, கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் நிதி அளிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மணமக்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் உடனடியாக சந்தித்தார். அப்போது, ஷெரின்ராஜ்- சூர்யா தம்பதியர் ரூ. 50 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

அந்த உதவித் தொகையைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர், மணமக்களை பாராட்டி, வாழ்த்தினார்.  

மன நிறைவு அளிக்கிறது...

கரோனா பாதிப்பால் பலர் உயிரிழந்து வரும் நிலையில், கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொண்டு நம்மால் இயன்ற உதவியை அரசுக்கு செய்யலாம் என்று கருதினோம். அதனால், அரசின் கரோனா நிவாரணப் பணிகளுக்கு எங்களால் இயன்ற உதவியாக ரூ. 50 ஆயிரம் நிதியை வழங்கினோம். கொண்டாட்டங்களில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட தற்போது எங்களுக்குப் பல மடங்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் கிடைத்துள்ளது என மணமக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.