கரோனா நிதி: நாகையில் மணக்கோலத்தில் வந்து ரூ. 50,000 அளித்த புதுமணத் தம்பதி
நாகையில் திருமணம் முடிந்தவுடன், மணக்கோலத்திலேயே மாவட்ட ஆட்சியரகம் வந்த ஒரு புதுமணத் தம்பதி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரத்தை நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது.







