யாஸ் புயல்: தயார் நிலையில் 115 பேரிடர் மீட்புக் குழுக்கள்
யாஸ் புயல் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 115 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் படையின் தலைவர் எஸ்.என்.பரதன் தெரிவித்துள்ளார்.


யாஸ் புயல் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 115 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் படையின் தலைவர் எஸ்.என்.பரதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது,
யாஸ் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் மணிக்கு 160 முதல் 185 கி.மீ. வரை சூறைக்காற்று வீசக்கூடும். மீட்புப் பணிகளை மேற்கொள்ள 5 மாநிலங்களில் 115 மீட்புக் குழுக்கள் பணியில் உள்ளனர். அதிகபட்சமாக ஒடிசாவில் 52 குழுக்களும், மேற்கு வங்கத்தில் 45 குழுக்களும் உள்ளது.
யாஸ் தீவிர புயல் வடக்கு ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகா் தீவுகள் இடையே நாளை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...