
பிஆர்எஸ் கட்சித் தலைவரும் முன்னாள் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் மகளுமான கே கவிதாவுக்கு சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை தில்லி கலால் கொள்கை ஊழலோடு தொடர்புடைய பண மோசடி வழக்கின் அடிப்படையிலா என்பது தெரியவில்லை.
தற்போது அகற்றப்பட்ட 2021-22 கலால் கொள்கை தொடர்புடைய பணமோசடி விவகாரத்தில் பெரும்பங்கு வகித்த தெற்கு குழுவோடு எம்எல்சி கவிதாவுக்கு தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறை கூறிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.