சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

சென்னை ஐஐடியில் இளையராஜாவின் பெயரில் ’இசைகற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’.

News image
Updated On :20 மே 2024, 10:07 pm IST

சென்னை ஐஐடியில் இளையராஜாவின் பெயரில் ’மேஸ்ட்ரோ இளையராஜா இசைகற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இளையராஜாவின் பெயரில் ’மேஸ்ட்ரோ இளையராஜா இசைகற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ தொடங்குவதற்கு சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் இசைஞானி இளையராஜாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, ’’இசையைக் கற்றுக் கொள்வதற்காக சென்னை வந்தவர் இன்றளவிலும் கற்றுக் கொள்ளவில்லை. நான் எதுவும் சாதிக்கவில்லை. இசை, என் உயிர் மூச்சைப் போன்றது. இசையமைப்பது எனக்கு மூச்சுவிடுவதைப்போல் இயல்பானது. நன்றாக இசையமைப்பதாக யாரேனும் சொன்னால், நன்றாக சுவாசிக்கிறீர்கள் என்று சொல்வதைப்போல் உள்ளது” என்றார். மேலும், பார்வையாளர்களுடன் சேர்ந்து பாடவும் செய்தார்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.