தற்போது தமிழ்நாட்டில் தனியார் பள்ளி ஆசிரியைகள், பணியிடத்தில் சுரிதார் அணிந்து வர அனுமதி உண்டு. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் பலர் சுரிதார் அணிந்து கொண்டு பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இதையொட்டி அரசுப் பள்ளி ஆசிரியைகள் சார்பாகவும், பணியிடத்தில் செளகரியமாக உணர்வதற்காக வேண்டி அதே போன்றதொரு கோரிக்கை முன் வைக்கப் பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை நிராகரித்துள்ளது.
பணியிடங்களில் புடவை மட்டுமே அணிய வேண்டுமென்பதை சில ஆசிரியைகள் விரும்பாமலிருக்கலாம், அவர்களைக் கட்டாயப் படுத்தி புடவை அணியச் சொல்வதைக் காட்டிலும் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடையான சுரிதார் அணிந்து கொள்ள விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றலாமே எனும் கோரிக்கை ஆசிரியைகள் சார்பாக ஆன்லைன் பெட்டிஷன் முறையில் முத்துகிருஷ்ணன் என்பரால் முதல்வரின் தனி செல்லுக்கு அனுப்பப்பட்டது. அரசின் பிற துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சுரிதார் அணிய உரிமை உண்டு என்பதைப் போலவே ஆசிரியைகளின் இந்தக் கோரிக்கைக்கும் அரசு செவி சாய்க்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் ஆசிரியைகளின் அந்தக் கோரிக்கை தற்போது பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நிராகரிக்கப் பட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுரிதார் அணிந்து கொள்ளலாம் எனும் மாற்றம் அரசின் கொள்கை முடிவுகளுக்கு மாறானது. எனவே தற்போது அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. அதோடு, பணியிடங்களில் சுரிதார் அணிந்து கொள்ள விரும்புவதாக இதுவரை எந்த ஒரு பெண் ஆசிரியரிடத்திலிருந்தும் தங்களுக்கு வேண்டுகோள் வரவில்லை என்பதால் தற்போதைக்கு முத்துகிருஷ்ணன் என்பவர் ஆசிரியைகள் சார்பாக விடுத்த கோரிக்கை நிராகரிக்கப் படுவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Article
நடிகரின் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் கொண்டாடியவருக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு!
முகநூலால் வந்த வினை... 88 லட்ச ரூபாய் பூஜை விவகாரத்தில் வகையாக சிக்கிக் கொண்ட பெங்களூரு புரோக்கர்!
உஷாபதியிலிருந்து உப ராஷ்டிரபதியாவதால் வெங்கய்யா நாயுடு பெற்றதும், இழப்பதும்?!
ஃப்ரீஸரில் மறைத்தது முன்னாள் காதலியின் சடலமா? இந்நாள் காதலியுடன் இளைஞர் கைது!
வட கொரியாவுக்கெதிரான போருக்கு ஆயத்தமாகிறதா அமெரிக்கா?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



