பரப்பன அக்ரஹாரா சிறையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு, அவர் ஒரு ஊழல் குற்றவாளி என்பதைப் புறம் தள்ளி சிறைத்துறை டிஜிபி எச்.என்.சத்யநாராயணா 2கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சசிகலாவுக்கு தனி சமையலறை, சிறைக்காவலர் ஒருவரின் உதவி உட்பட சில சிறப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளார் என அப்போது பரப்பன அக்ரஹார சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தனது உயரதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். தனது புகாருக்கு ஆதாரமாகச் சில சான்றுகளையும், தெளிவான விளக்கங்களையும் கூட ரூபா தனது உயரதிகாரிகளுக்கு அனுப்பி இருந்ததாக அவரே அப்போதைய தனது நேர்காணல்களில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இவ்விவகாரத்தில் உண்மை நிலையைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அதற்கு முன்பாக சிறைத்துறை டிஜிபி மீது புகார் அளித்த ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் யார் மீது புகார் அளித்தாரோ அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டுவிட்டார். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘இந்தியா டுடே’ இணையத்தில் தனது 'So Sorry Politoon' அரசியல் நையாண்டி கார்டூன் வரிசையில் சசிகலாவின் அரசியல் செல்வாக்கு மற்றும் பண அதிகார வீச்சு எது வரை பாயும் என்பதாக இவ்விஷயத்தை கலாய்த்து புதிய பாலிடூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் பலரால் பார்க்கப்பட்டு, பலமுறை பகிரப்பட்டு தொடர்ந்து வைரலாகி வருகிறது.
அந்தக் கார்ட்டூன் இது தான்...
Related Article
பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் பாலியல் வன்முறை வழக்கில் கைது!
வெங்கய்ய நாயுடு ராஜினாமா செய்த அமைச்சரவைப் பொறுப்புகளை இனி நிர்வகிக்கப் போவது இவர்களே!
ஐஐடி கோச்சிங் செல்ல வற்புறுத்தியதால் 11 வயது மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
பெங்களூரில் 3 குழந்தைகளுக்கு இழந்த குடும்பத்தை மீட்டுக் கொடுத்தது ஆதார் அட்டை!
20 வருடங்களாக வீட்டுக்குள் சிறை வைக்கப் பட்ட பெண் மீட்பு!
அமெரிக்காவின் MIT யில் பயில இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே ஒரு மாணவி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பங்கிபூரில் 64 ஆயிரம் வாக்குளுடன் பிரசாந்த் கிஷோர் வரலாற்று வெற்றி!

அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்! அடுத்தடுத்து வெளியான பட அறிவிப்புகள்!

அமைச்சரவையில் இடமில்லை! பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



