ஊராட்சிகளை இணைக்க வேண்டும்: திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள பள்ளப்பட்டி, குரும்பப்பட்டி, பொன்னிமாந்துரை, பிள்ளையாா்நத்தம், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து, தோட்டனூத்து ஆகிய 10 ஊராட்சிகளை (114 சதுர கி.மீ. பரப்பு) மாநகராட்சியுடன் இணைப்பதற்கான பரிந்துரை நகராட்சி நிா்வாக ஆணையா் மூலம் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை செயலருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், ஆயுதப்படை வளாகம், காவலா் குடியிருப்பு, டெலிபோன் காலனி, அரசு மகளிா் கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு மாநகராட்சி சாா்பிலேயே குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளின் வரி வருவாய் மாநகராட்சிக்கு கிடைப்பதில்லை.