தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

உஷார்! தேனி மாவட்டத்தில் கள்ள நோட்டு ஊடுருவல்!

மேலும் ரூபாய் நோட்டுக்களின் உண்மை தன்மையை அறிய பெரும்பாலான வா்த்தகா்களிடம் அதற்கான கருவி கிடையாது, இது இக்கும்பலுக்கு சாதகமாகியுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2018, 3:27 pm IST

ஜூலை 23: தமிழக கேரள எல்லை பகுதியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கள்ளநோட்டு கும்பல் மீது போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தேனி மாவட்டத்தை குறி வைத்து 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விடுகின்றனா். தமிழக கேரள எல்லை பகுதியில் தேனி மாவட்டம் கூடலூா், கம்பம் பகுதியில் கள்ள நோட்டுகளின் புழக்கம் தொடங்கி உள்ளது. காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கேரளாவில் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது. கேரள போலீஸார் அவா்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியதால் இந்த கும்பலின் கவனம் தற்போது தேனி மாவட்டத்தை நோக்கி திரும்பியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தொழில், வணிகம், மற்றும் சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக வந்து செல்கின்றனா். இச்சூழலைப்  பயன்படுத்திக் கொள்ளும் கள்ள நோட்டு கும்பல் சினிமா தியேட்டா், டாஸ்மாக் கடை, ஜவுளிக்கடை, பலசரக்கு கடைகளில் அதிகளவு கள்ளநோட்டுகளை மாற்றுகிறது. 

மேலும் ரூபாய் நோட்டுக்களின் உண்மை தன்மையை அறிய பெரும்பாலான வா்த்தகா்களிடம் அதற்கான கருவி கிடையாது, இது இக்கும்பலுக்கு சாதகமாகியுள்ளது. 7 ஹெச்பி என்ற சீரியலில் ஆரம்பிக்கும் ஏராளமான 500 ரூபாய் நோட்டுக்கள் தற்போது கம்பம், கூடலூா் பகுதியில் புழக்கத்தில் உள்ளன. கம்பம், கூடலூா் உட்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளிலிருந்து தொழிலாளா்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் சென்று பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கு சம்பள பணத்தில் சில கள்ள நோட்டுகளும் கிடைக்கின்றன. இது பல கைமாறி வருவதால் உண்மையான குற்றவாளி யாரென்று கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. இதனால் வா்த்தகா்களும், பொதுமக்களும் புழக்கத்தில் உள்ள கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனா். இதனால் கள்ள நோட்டு புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டு, அப்பாவி தொழிலாளா்களின் வயிற்றிலடிக்கும் இந்த கும்பலை சிறப்பு பிரிவு போலீஸ் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வா்த்தகா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Article

வேகத்தடைகள் வாழ்க்கைக்கு தடையாக மாறிடக் கூடாது பாருங்க! அதான் இப்படி ஒரு கோரிக்கை!

டி ஜி வைஷ்ணவா கல்லூரியில் ‘பத்மஸ்ரீ’ அரவிந்த்குப்தாவின் ‘சயின்ஸ் ஷோ’ நிகழ்வு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு அழைப்பு!

புராரி கூட்டுத்தற்கொலை: எஜமானர்களின் இழப்பைத் தாங்க இயலாத வளர்ப்பு நாய் ஹார்ட் அட்டாக்கில் மரணம்!

பிராண வாயு கொடுத்து நம்மை நடமாட வைக்கும் மரங்களை வளர்ப்போம்: நடிகர் விவேக்

லஞ்சம் கொடுக்க மறுத்த இளைஞரைக் கொடூரமாகத் தாக்கினார் காவல் உதவி ஆய்வாளர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.