நாட்டில் மே 4 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட தடங்களில் உள்நாட்டு விமான சேவைகளுக்கான முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.
மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளுக்கு முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதுடன், ரயில், விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டிருந்தது.
இரு தவணைகளாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள், வரும் மே 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன.
வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மே 4 முதல் இந்தியாவுக்குள் விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ள ஏர் இந்தியா.