இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆமதாபாத் மருத்துவமனை தீ விபத்து: உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு

ஆமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக 41 பேர் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News image
அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்து: உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு
Updated On :6 ஆகஸ்ட் 2020, 6:37 am

DIN

ஆமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக 41 பேர் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குஜராத் ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் தனிவார்டு மூலம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து குஜராத் அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் குப்தா பேசியதாவது, தீ விபத்து ஏற்பட்ட தனியார் மருத்துவமனைக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. உரிய விசாரணைக்கு பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். மருத்துவமனை அறக்கட்டளையை சேர்ந்தவர்களிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலாளர் சங்கீதா சிங்கை நியமித்து குஜராத் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மூன்று நாட்களுக்குள் விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.